Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:34:36 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSeyed Ibrahim
Placekayalpatnam
Approved Comments10
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [22 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13676

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் லுக்மான் காக்கா அவர்கள் இந்த தேர்தலில் என்ன நடந்தது என மறைமுகமாக கூறி இருக்கிறார்கள் நன்றி

அவர்கள் சொன்னது போல் இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது. அங்கு எடுக்கப்படும் முடிவுகள் இங்கு அமல்படுதப்படுகின்றன. இது தான் உண்மை நேற்றைய தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்த நகர் மன்றம் நமது பிரதான வீதியில் உள்ள புதிய நகரமன்ற ?! (துணை தலைவர் தேர்தலுக்கு பிறகு செயல் பட துவங்கியது ) அலுவலகத்தில் கூடியது

தங்களால் துணை தலைவர் தேர்வுக்காக வீசி எறிந்த ரொட்டி துண்டுகளை கவ்வி பிடித்த விசுவாசிகள் அங்கே அழைக்க பட்டார்கள் மேலிடத்து ஆணைப்படி யார் யாருக்கு என்ன பதவி என அங்கே பிரித்து கொடுக்கப்பட்டது இதற்காகவே மச்சான்கள் மதராசிலிருந்து வந்தார்கள் எல்லாம் இனிதே நடந்து முடிந்தது

சும்மா ஒப்புக்காக அரசாங்கத்தையும் பாவப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்காக நகர்மன்றதிலே தேர்தல் நடத்த பட்டது

TAX Comity தேர்தலில் போட்டி இட்ட எழுத படிக்க தெரிஞ்ச பட்டதாரி ஹைரியா லாத்தா தோற்கடிக்க படுகிறாகள் காரணம் லுக்மான் காக்கா சொன்னது தான்

யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.

அரசியல் பதவிக்கான தகுதிகளே வேறு. அது இல்லாதது என்னிடம் உள்ள குறைதான். ஒப்புக்கொள்கிறேன். Copy Paste

இவ்வளவு நடந்தும் எங்கோ ஒரு ஒளி தெரிகிறது
அது நம்பிக்கை ஒளியாக வருமா
"மெகா" ஒளியாக மாறுமா
மக்கள் காத்திருக்கிறாக்கள் வழமை போன்று .................!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் கலைஞர் பட்டினமே!‘ -திமுக செயலாளர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13091

திமுக காயல்பட்டினம் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் அவர்களே

இங்கே திட்டமிட்டு ஒரு உண்மையை பொய்யாக்கி இருக்கிறீர்கள் (புறநகர் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஊர் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி, மதுபானம் வழங்கியதாக பிரச்சாரம் செய்தார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை முஸ்லீம்களிடத்தில் மட்டும் கெட்டிக்காரத்தனமாக செய்தார்கள். இதில் அவர்கள் இறைவனுக்கு அஞ்சவில்லை.) Copy Paste

மதுபானம் வழங்கியது பொய்யல்ல நிஜம் மது பானம் மட்டும் அல்ல பணம் விநியோகம் செய்தது பிரியாணி விநியோகித்து அனைத்தும் சத்தியமான உண்மை!

சகோதரி ஆபிதா அவர்கள் வாக்கு சேகரிக்க புறநகர் சென்று வந்ததை எப்படி எப்படியெல்லாம் கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்தார்கள் உடன்பிறப்புகள்.

பாவம், பெரியவர்கள் அடங்கிய ஐக்கியப் பேரவையை அடமானம் எடுத்துக்கொண்டு, உடன்பிறப்புகள் அவ்வளவு அயோக்கிய தனத்தையும் அரங்கேற்றிவிட்டு ‘காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே‘ என்று கூற உள்ளூர் உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் வெட்கம் இல்லாமலிருக்கலாம். திமுக அனுதாபியான நாங்கள் வெட்கபடுகிறோம் வேதனை அடைகிறோம்.

பாரம்பரிய மிக்க கட்சியை யாரோ ஒரு பணக்காரருக்கு அடகு வைத்தீர்களே திமுக அனுதாபியான நாங்கள் வெட்கபடுகிறோம் வேதனை அடைகிறோம்.

இப்போதெல்லாம் பணத்தை மட்டுமே குடுத்து வாக்களர்களையும் கவுன்சிலர்களையும் சிலருக்கு விலைக்கு வாங்க முடிகிறது.

உங்களது பெயரையோ, உங்கள் வீட்டின் பெயரையோ வேண்டுமானால் உங்கள் தானைத்தலைவரின் பெயரை வைத்து ரசியுங்கள்.

இதோடு உங்கள் அறிக்கை நிறுத்தப்படுமானால், எங்கள் கருத்துக்களையும் நிறுத்திக்கொள்கிறோம். தொடர்ந்தால் நகராட்சி துணை தலைவர் தேர்தலில் நாங்கள் கண்ட பல தில்லுமுல்லுகள் “ஆதாரங்களுடன்” ஒவ்வொன்றாக வெளியே வரும்.

நாங்கள் ஒன்றும் பாவாடை கட்டிய ஆண்மகன் அல்ல! (அட்மின் அவர்களே! இதை கத்தரி போட்டு விடாதீர்கள்! இது சாட்சாத் திமுக நகர செயலாளர் பெருந்தகை அவர்கள் நகரப் பிரமுகர்கள் முன்னிலையில் ஐக்கியப் பேரவை மேடையில் மேடையில் உதிர்த்த நாகரிகமான சொற்கள்தான்!)

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க நிலம்: ஒரு பார்வை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உணரவே மாட்டார்களா?
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [03 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12856

அன்பிற்குரிய சகோதரர்களே, இச்செய்தியில் அப்படி என்ன தவறு உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.

என்னைப் பொருத்த வரை, பலரைப் போல கண்ணை மூடிக்கொண்டு யாரையும் ஆதரிக்கவும் மாட்டேன். எதிர்க்கவும் மாட்டேன்.

ஐக்கியப் பேரவை சார்பில், துணை மின் நிலையத்திற்கு நிலம் வாங்குதவற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டபோதே அதன் அறியாமையை ஒரு பொறுப்புள்ள மீடியாவாக காயல்பட்டணம்.காம் அவர்களிடமே உணர்த்தியிருக்கிறது.

ஒரு மாதத்திற்குள் நிலம் வாங்கிக் கொடுக்கப்படாவிட்டால், துணை மின் நிலையம் ஆத்தூருக்கு மாற்றப்படும் என மின் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டதாக ஐக்கியப் பேரவை தெரிவித்துள்ளதைக் கேள்வியுற்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காயல்பட்டணம்.காம் எழுதிக்கேட்டு அறிந்ததில் என்ன தப்பு? இலவசமாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் மின்வாரியம் பதில் தந்துள்ளது.

உண்மையிலேயே பெரியவர்களை அவமதிக்கும் எண்ணம் காயல்பட்டணம்.காமுககு இருந்து இருந்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலை ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் நேரில் சென்று, அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தேவையே இல்லையே? அப்போதே பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டிருக்கலாமே??

தெரிந்த விபரங்களை யாரும் எடுத்துச்சொல்லலாம். அதில் எந்தத் தப்பும் இல்லை. அது காயல்பட்டணம்.காம் ஆக இருக்கட்டும் அல்லது ஒரு அடிமட்ட காயலனாக இருக்கட்டும்! தனக்குத் தெரிந்த தகவலை, ஊர் நன்மை கருதி சரியான தருணத்தில் காயல்பட்டணம்.காம் பேரவையிடம் தெரிவிக்காமல், இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருந்தால், சில சகோதரர்கள் இன்னும் பக்கம் பக்கமாக கருத்து வெளியிட்டு கரித்து கொட்டியிருப்பார்கள்.

ஒரு செண்ட் நிலத்திற்கு நூறு ரூபாய்தான் தருவாங்களாம் என்று யாரோ சொன்னதை நம்பி, பேரவையின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகள் தமது பணத்தையும் போட்டு, இதர தனவந்தர்களிடமும் சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் திரட்டி இந்த வேலையைச் செய்யும்போது, அதற்கு அவசியமே இல்லை... இவ்வளவு சிரமப்பட்டு பணம் சேர்த்து செய்வதை விட, இலகுவாகவே நாம் செய்துகொள்ளலாம் என்று காயல்பட்டணம்.காம் சொன்னது தப்பு, பெரியவர்களுக்கு அவமரியாதை, பேரவைக்கு எதிர்ப்பு என்றால், பின்னே ஊர் நன்மைக்கு என்னதான் சொல்ல வேண்டுமாம்?

காயல்பட்டணம்.காம் நிர்வாகிகளுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்! நீங்கள் விருப்பு - வெறுப்பின்றி இப்படி செய்திகளை வெளியிடுவதானால் இதுபோன்ற விமர்சனங்களையும், வெறுப்புக்களையும் நீங்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!!! ஆனால் படைத்த இறைவனிடம் உங்களுக்கு நிச்சயம் நற்கூலி உண்டு. எனவே பொறுமையுடன் களப்பணி செய்யுங்கள்!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் வெற்றி குறித்து நகர தி.மு.க. அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா???
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12788

அன்பு சகோதரர்களே!!! காயல்பட்டினம் கலைஞர் பட்டினம் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.ஐ.காதர் அவர்களும். நகர செயலாளர் அல்ஹாஜ் மு.த.ஜெய்னுதீன் அவர்களும் மார்தட்டி போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள்.

அவர்களுடைய சிந்தனைக்காக, கடந்த 2006இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நகர திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் மண்ணைக் கவ்விய பட்டியலை சகோதரர் Cnash தந்துள்ளார். (அது வேற வாய்! இது நாற வாய்!! என்று) எதுவும் சொல்லி சமாளித்து விடக்கூடாதே என்ற கவலையில், நடப்பு உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் நின்று சாதனை படைத்த (???) கழக உடன்பிறப்புக்களின் தேர்தல் முடிவுகளை இதோ தருகிறேன் பாருங்கள்...

5 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் தீவிர அனுதாபி (MLA அவர்களின் வலது கரம் என்று அழைக்கபடுகின்ற) சகோதரர் முத்து அவர்கள் தோல்வி - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

7 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் வட்ட செயலாளர் சகோதரர் MK மொஹ்தூம் அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

12 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் மாணவர் அணி முன்னோடி திரு சபாபதி அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

13 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் இளைஞ்சர் அணி அமைப்பாளர் திரு கோபால் (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

13 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் முன்னாள் நகர செயலாளர் சொலுக்கு மாமா அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

14 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் கூடுதல் செயலாளர் மற்றும் மகளிர் அணி திருமதி பூங்கொடி அவர்கள் தோல்வி (டெபாசிட் இழப்பு) - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

15 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் வட்ட செயலாளர் (டீ கடை) சாமு அவர்கள் தோல்வி - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

16 வது வார்டில் போட்டிஇட்ட திமுக வின் முன்னால் வார்டு செயலாளர் கழகத்தின் மூத்த உறுபினர் சகோதரர் கோபி சையது அவர்கள் தோல்வி - - - காயல்பட்டினம் இன்றும் கலைஞர் பட்டினமா ???

மேலும் சகோதர்ர் Cnash குறிப்பிட்டுள்ளபடி, திமுக மா........நில பொதுக்குழு உறுப்பினராக உள்ள அல்ஹாஜ் எஸ்.ஐ.காதர் அவர்கள் கடந்த தேர்தலில் பெயர் தெரியாத ஒரு சுயேட்சையிடம் தோற்றுள்ளார்...

நான் மேற்சொன்ன பட்டியலில் டெபாசிட் பாதுகாக்கப்பட்டவர்களை விட இழந்தவர்களே அதிகம்! இருந்தாலும் இது கலைஞர் பட்டணம்தானுங்கோ! வாழ்க கலைஞர்! வளர்க அவரது உடன்பிறப்புக்கள்!!

மக்களே சிந்திப்பீர் !!!

ஊர் நலனில் அக்கறை கொண்டவர்கள்
யார் என உணர்ந்து கொள்வீர் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் வெற்றி குறித்து நகர தி.மு.க. அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம்பிக்கை மோசடி!
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12752

அன்பிற்குரிய சகோதரர்களே!

இந்த போஸ்டர் மற்றும் நோட்டீஸ் நமக்கு தெரிவிப்பது என்ன என்பதை ஊர் நன்மையைக் கருத்தில் கொண்டு மட்டும் கருத்துப்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உங்கள் வீடுகளில் ஒரு பிரச்சினை என்றால் எப்படி அக்கறையுடன் அதிலுள்ள குறைகளை மட்டும் கவனித்து உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வீர்களோ அப்படியே இதையும் பார்க்க வேண்டும்.

நமதூர் நகர்மன்றத் தேர்தலில் அரசியல் தலையீடு வேண்டாம் என ஐக்கியப் பேரவை கருதியது உண்மை என்றால் அது தலைவருக்கு மட்டும் அல்ல! மாறாக துணைத்தலைவருக்கும் பொருந்தும்தானே?

ஒருவேளை அரசியல் தலையீடு தேவை என்று வைத்துக்கொணடாலும், இப்போது இருக்கும் சூழ்நிலையில் அதிமுக சார்பாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை என்றுதானே சொல்ல வேண்டும்?

அது போகட்டும்! சரி, இந்த பதினெட்டு வார்டுகளிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் யார் அரசியல் கட்சி சின்னத்தில் நின்றவர்கள் என்பதை நகர திமுகவினரோ அல்லது அதன் மாநில பொதுக்குழு உறுப்பினரோ தெரிவிப்பார்களா? உண்மையில் நீங்கள் கட்சி ரீதியாக களத்தில் இறங்க வேண்டுமென்றால் வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே மும்பை மெய்தீன் அவர்களை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அல்லவா நிறுத்தியிருக்க வேண்டும்?

சுயேட்சையாக நின்றுவிட்டு, வெற்றி பெற்றவுடன் “திமுக ஜெயிச்சிடுச்சி! காயல்பட்டணம் மீண்டும் கலைஞர் பட்டணம் ஆயிடுச்சி” என்று மார்தட்டும் திமுக நிர்வாகிகளுக்கு எனது பணிவான கேள்வி: திமுகவினர் பலர் தோற்றுள்ளார்களே, அப்படியானால், அந்தந்த வார்டுகளில் எல்லாம் கலைஞர் பட்டணம் தொலைந்துபோயுள்ளதே? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்???

சரி, அவர்களை விடுங்கள்! இது கலைஞர் பட்டணம் என்று அவர்கள் போஸ்டர் வெளியிட்டதும் மகிழச்சியில் திளைத்து கருத்து வெளியிட்டுள்ள - வெளியிடவுள்ள அன்புச் சகோதரர்களைக் கேட்கிறேன்... இது நம்பிக்கைத் துரோகமில்லையா? இவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களத்தில் நின்றிருந்தால் அதிமுகவினர் எதிர்த்து பணியாற்றி இருக்க மாட்டார்களா? உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தோல்வி என்பது அவர்களது மானப்பிரச்சினை என்ற உண்மை அதிமுகவிற்குத் தெரியாதா? தெரிந்தும் அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா?

உண்மையில் நமதூரை கலைஞர் பட்டணம்தான் என்று நிரூபிக்க, முதலில் அவர்களது உதயசூரியன் சின்னத்தில் களத்தில் இறங்கட்டும்! பின்னர் தெரியும் இறைவனின் முடிவு என்ன என்று!

நான் திமுக எதிரியுமல்ல! அதிமுக ஆதரவாளனுமல்ல. அந்தந்த நேரத்தில் உள்ள சூழ்நிலைகளை மட்டும் மனதிற்கொண்டு எனது நடவடிக்கைகளை அமைததுக்கொள்பவன்.

நமதூருக்கு நன்மை விளைய வேண்டுமானால் நமது அறிவையும் அதற்கு பயன்படுத்த வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு கலைஞர் பட்டணம் என்று கருதுவது, நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம்.

இதுவே கலைஞர் ஆட்சி நடக்கும்போது, வாயார வயிறார சொல்லுங்கள் “கலைஞர் பட்டணம்” என்று. ஊர் வாழும். இப்போது சொன்னால் ஊர் வாழுமா, நாறுமா?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதிய நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டம்! தலைவர், 14 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12105

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரி ரஹ்மத் மற்றும் சில சகோதரர்கள் இங்கே ஒரு கேள்வியை எழுப்பினார்கள் ஐக்கிய பேரவை பெரியோர்களை அழைத்திருக்கலாமே ?அழைத்தீர்களா ? என்று

உண்மை என்னவென்றால் ஐக்கிய பேரவை பெரியோர்கல் அனைவர்களும் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டு அழைத்து இருக்கிறார்கள் மேலும் வீடு தேடி சென்று அழைத்தும் இருக்கிறார்கள்

இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்ற தலைவியை வாழ்த்து சொல்லவே மனம் வராத இவர்களா இந்த கூட்டத்தில் கலந்தொகொள்ள போகிறார்கள் உங்கள் ஆசைக்கு அளவே இல்லையா

வந்தால் ஒற்றுமை வந்துவிடுமே என வராமல் இருக்கிறார்கள் போலும் அனைத்தையும் அறிந்தவன் அல்லா ஒருவனே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11321

A.J. cholukku அவர்களே

உங்கள் கருத்தை மதிக்கிறேன் 7 வது வார்டில் பூத் எஜன்ட்ட்டாக இருந்த உங்களிடம் book க்கு கள்ள வோட்டு போடா கேட்டார்கள் என்ற செய்தியை சொன்னீர்களே

உங்களுக்கு அடுத்த அறையில் 8 வது வார்டில் BUSக்கு பூத் எஜன்ட்ட்டாக இருந்த மாமன்னர் முதலில் தன் மகனின் வோட்டையும் பிறகு தன் வோட்டையும் போட்டு பூத் அதிகாரிகளால் மிக கேவலமாக பூத் thaய் விட்டு விரட்டி அடிக்க பட்டாரே அந்த செய்தி தங்கள் காதுக்கு வரவில்லையா ??? இல்லை விசுவாசத்தின் காரணமாக மறைத்துவிடீர்களா

பல பொது செவில் ஈடுபடும் தாங்கள் நடுநிலை தவற மாட்டீர்கள் என இன்னும் நம்புகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: YUF செயலாளர் அறிக்கைக்கு காக்கும் கரங்கள் விரிவான விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதை ஏன் கவனிக்கவில்லை யாரும்?
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11312

சகோதரர்களே, கக்கும் கரங்கள் அழைப்பின் பேரில்தான் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் உரையாற்ற சென்றிருக்கிறார். ஒருவேளை அவர் அழைக்கப்பட்ட நேரத்தை விட தாமதமாக வந்திருந்தாலும், கூட்டமும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் துவங்கவில்லைதானே?

சரி போகட்டும்! வந்தவரை பேச வைக்க வாய்ப்பே இல்லையென்றால் கூட அதை நளினமாகச் சொல்லியிருக்கலாமே?

ஐக்கியப் பேரவையின் வேட்பாளரை ஆதரித்து பேசச் சென்ற என்னை மரியாதைக்குரிய சகோதரர் அப்துர்ரஷீது (அவ்லியா) அவர்களும், ஜனாப் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்களும், “உன்னை யார் பேச அழைத்தது? முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேசிய பின்பு நீ பேசுவது முறையா?? என்று கேட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். இதுதான் அழைக்கப்பட்ட ஒருவரை கண்ணியப்படுத்தும் முறையா? அத்துடன், செய்தியில் இவ்வளவுதான் உள்ளது. அதற்குப் பிறகு நடந்தவற்றை நான் தெரிவிக்கிறேன். உண்மைதானா என்று கக்கும் கரங்கள் தலைவர் விளக்கம் தரட்டும்!

“நான் கக்கும் கரங்கள் தலைவர் தம்பி ஜெய்னுல் ஆப்தீன் அழைத்ததால்தான் வந்துள்ளேன். அழைக்காத இடத்திற்கு ஒருபோதும் நான் வந்ததில்லை” என்று அவர் தெரிவித்தவுடன், “யார்ட கேட்டுட்டு நீ இவனை அழைத்தாய்?” என்று மரியாதைக்குரிய அவ்விருவரும் கக்கும் கரங்கள் தலைவர் ஜெய்னுல் ஆப்தீனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆகா, சூப்பர்! ஒரு பொதுக்கூட்டத்தை இப்படியல்லவா நடத்த வேண்டும்?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். “கக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் பேரவைக்கு என்னப்பா சம்பந்தம்? ஏன் அதையே இழுக்கிறீங்க? என்று சொல்பவர்களே! மேலே உள்ள பத்தியைப் படித்துவிட்டு சொல்லுங்கள் உண்மையிலேயே இது கக்கும் கரங்கள் நடத்திய கூட்டம்தானா அல்லது அந்தப் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று! கக்கும் கரங்கள் நடத்திய கூட்டம்தான் அது என்றால், “யார்ட கேட்டுட்டு நீ இவனை அழைத்தாய்?” என்று எப்படி கேட்கலாம்? அதைக் கேட்ட பின்னாடியும் அவங்க எழுதித் தர்றதையெல்லாம் அறிக்கையாக விடுகிறாரே கக்கும் கரங்கள் தலைவர்? இதுவல்லவா அமைப்பு? இவங்களைப் பார்த்து அல்லவா பாடம் படிக்கனும் ஒரு அமைப்பை எப்படி நடத்துறது என்று?

அது போகட்டும்! கக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் இந்த வெப்சைட்டில் எந்தக் கருத்து தெரிவித்தாலும், அவருடைய பெயரைப் போட்டு அமைப்பின் பெயரையும் போட்டு, அதன் தலைவர் என்று போட்டுதான் இதுவரை கருத்து வெளியிட்டு இருக்கிறார்.

தனது தனிப்பட்ட கருத்தைக் கூட அமைப்பின் பெயரில், அதிலும் குறிப்பாக ஆத்திரத்தில் சில வார்த்தைகளைக் கக்கி, அவ்வளவு “பக்குவமாக” செயல்படுபவர்தான் கக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர். அவ்வளவு பக்குவமான அமைப்புதான் கக்கும் கரங்கள் அமைப்பு.

அது சரி... இந்தக் கூட்டத்திற்கு மேடை அமைப்பு, டெகரேஷன், சவுண்ட் சர்வீஸ், நோட்டிஸ், சேர் வாடகை, சுத்தப்படுத்துவது, ஆட்டோ பிரச்சாரம் என பல வேலைகளுக்கும் சேர்த்து ஒரு முப்பதாயிரமாவது செலவாகியிருக்குமே? ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு உண்மையிலேயே செலவு செய்தது கக்கும் கரங்கள்தானா? அதற்கு அவர்களிடம் என்ன வரவு உள்ளது? என்ன செலவு உள்ளது? தெரிவிப்பாங்களா? கேக்குறவன் கேணையனா இருக்கும் வரை கேப்பையில் தேன் வடியுதுன்னு சொன்னாலும் கூட சிலர் நம்புவர்கள். அதை விமர்சனம் செய்பவர்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று சொல்லுவார்கள்.

ஒருபக்கம் தவறான நடவடிக்கைகள் கணக்கின்றி நடந்துகொண்டிருக்கும். அதைக் கண்டிக்க அந்த கமிட்டியில்தான் நாதியில்லை. குறைஞ்சபட்சம் ஒரு காயலனாக அதை வெளிப்படுத்துவது கூட குற்றம் என்றால், அந்தக் குற்றத்தை ஒவ்வொரு காயலனும் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10916

அன்பார்ந்த காயல் சொந்தங்களே !!!!!

இந்த கூட்டத்தில் பேச அழைக்க பட்ட எங்கள் சங்கத்தின் (YUF) செயலாளர் அவர்கள் பார்வையாலும் இழி சொல்களாலும் பலிக்கபட்டு மனதளவில் மிகவும் காயப்பட்டு தங்களின் வேதனையை எங்களிடம் பகிர்ந்துகொண்ட பல விசயங்களில் ஒரு சிலதை மட்டுமே இங்கே பகிர்ந்துள்ளர்கள் . இதை கூட செய்தியாக்க கூடாது என தொடர்ந்து அவர்களை நிற்பந்திகிரர்கள் ஒரு சிலர்.

இது தேர்தல் சமயமாம் இப்போது இதை செய்தியாக்கினால் மக்களுக்கு உண்மை நிலை விளங்கி வாக்குகள் மாறி விழுந்துவிடுமாம்ம் என்ன ஒரு விசுவாசம்

மக்களே சிந்திப்பீர்!!!!

மனசாட்சி படி வாக்களிப்பீர்!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவையின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நியாயத்தை உணர்ந்துகொள்வோம்!
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [13 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10497

இங்கே இச்செய்தியைப் பற்றி கருத்துப்பதிவு செய்யும் ஒருவர் கூட முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்காதது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. அக்கேள்விகள் ஏற்கனவே பழைய செய்திகளில் கருத்துப்பகுதியில் கேட்கப்பட்டவைதான்! மனிதன் மறதியுள்ளவன்தானே? அதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டேதான் இருப்பான். சரி விஷயத்திற்கு வருகிறென்.

(1) ஐக்கியப் பேரவை நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான பொது வேட்பாளர் தேர்தல் வெளிப்படையானதா? அங்கே ஜமாஅத், பொதுநல அமைப்புகள் பெயரில் குழுமியிருந்த பிரதிநிதிகள் (???) அந்தந்த ஜமாஅத் அல்லது பொதுநல அமைப்புகளின் பொதுக்குழுவில் கலந்தாலோசித்து அனுப்பப்பட்டவர்களா?

(2) சரி, ஜலாலிய்யா கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும் தத்தம் உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து வரும் வகையில், விருப்ப மனு அளித்து கையெழுத்திட்ட / கையெழுத்திடாத மக்களின் பெயர் பட்டியலாவது தரப்பட்டதா?

(3) சரி அது போகட்டும்! அழைப்புக் கடிதத்தில்தான் விபரம் இல்லை. குறைந்த பட்சம் கூட்டத்திலாவது கலந்தாலோசனைக்கு நேரம் ஒதுக்கப்பட்டதா? எடுத்த எடுப்பிலேயே வாக்குப் பெட்டியை முன்வைத்ததன் ரகசியமென்ன?

(4) ஆகக் குறைந்தபட்சம், “இப்போது பெயர்களை அறிவிக்கிறோம்... உங்கள் ஜமாஅத் / அமைப்பின் மக்களிடம் கலந்தாய்வு செய்தபின் நாளை உங்கள் முடிவோடு இங்கே வாருங்கள் என்று எந்த வெளிப்படையான அறிவிப்பாவது உண்டா?

அன்பானவர்களே... இந்த ஐக்கியப் பேரவையை அதன் இன்றைய நிர்வாகிகளே இல்லாமலாக்க நினைத்தாலும் நாம் எதிர்த்துப் போராடி, பேரவையைக் காப்பாற்றுவோம். அது வேறு விஷயம்.

ஆனால், இந்தப் பேரவையை இயக்குவது யார்? அவ்வப்போது விரோதியாகும் செல்வந்தர் எப்படி இதுபோன்ற முக்கியமான கலந்தாலோசனைகளின்போது மட்டும் வழிகாட்டியாகி விடுகிறார்?

அழகாகவும், அமைதியாகவும், அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாகவும், எம்.கே.டி.அப்பா, எல்.கே.அப்பா, பாவலர் அப்பா, விளக்கு அப்பா காலங்களில் எல்லாம் நடைபெற்று வந்த நம் ஊர் தேர்தலில் பணத்தைக் கொடுத்து, மக்களைக் கெடுத்து, குட்டிச் சுவராக்கி, பணத்திற்காகவே வேட்பு மனு செய்யும் கேடுகெட்ட - நரவலைத் தின்பதற்கு ஒப்பான கலாச்சாரத்தை இந்த ஊரில் அறிமுகப்படுத்திய சீதேவி யார்?

அவர்களின் ஒட்டுமொத்த குழுக்கழும் இணைந்துதானே இன்று இந்த ஐக்கியப் பேரவையை நடத்திக்கொண்டிருக்கிறது? காயல் அமானுல்லா காக்காவின் கருத்துப்படி அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகளால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம்தான் இன்றைய ஐக்கியப் பேரவை நிர்வாகம் என்றால், அவர்களல்லவா வழிகாட்ட வேண்டும்?

ஒருபுறம் இந்த கருத்துப்பகுதியில் உண்மையான விமர்சனங்கள் வந்தால் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லையே? இங்கே நமதூரில் இந்தப் பெரியவர்கள் அடங்கிய பேரவையின் பெயரில் எத்தனை எத்தனை விமர்சனங்கள், வதந்திகள் நாக்கூசாமல் சொல்லப்பட்டு வருகிறது என்பதை ஊரிலிருப்பவர்கள்தான் அறிவார்கள்.

சரி, இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் ஷாஜகான் காக்கா, “மத்திய காயல் மக்கள் பத்து நிமிடத்தில் பெட்டியை நிறைத்து விடுவார்கள்” என்று பட்டவர்த்தனமாக கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அதைக் கேட்ட பின்பும், கொஞ்சம் கூட சூடு சொரணையின்றி இருக்கும் “ஊர் ஒற்றுமை”வாதிகளைப் பார்த்தால் ஆச்சரியமாக இல்லையா?

அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடாது என்பது ஐக்கியப் பேரவையின் கொள்கையாம். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கையெழுத்தெல்லாம் வாங்கினாங்களாம். ஆனால், பொது வேட்பாளர் வென்றால்தான் அம்மாவை சந்திக்க முடியும் என்று அதே பேரவையின் இந்த மேடையில், காயல் மவ்லானா கூறுகிறார்! துணைத்தலைவர் பதவியையாவது அதிமுகவுக்கு தாருங்கள் என்று மற்றொரு ஆளுங்கட்சிக்காரர் கேட்கிறார். கொள்கையில் தெளிவாக இருந்தால், ஏன் நிகழ்ச்சி தொகுப்பாளர் “அது பரிசீலிக்கப்பட வேண்டிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்” என்று சொல்ல வேண்டும்? எடுத்த எடுப்பிலேயே, “இது பேரவையின் கொள்கைக்கு நேர் எதிரானது. எனவே இதுபற்றி பேசவே பேசாதீங்க” என்று அல்லவா சொல்லியிருக்கனும்?

அப்படியி்ல்லைன்னா, “தலைவர் மட்டும்தான் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடக்கூடாது! துணைத்தலைவர், உறுப்பினர் எல்லாம் பிரச்சினையில்லை” என்றாவது அந்த மேடையில் தெளிவுபடுத்தியிருக்கலாமே?

அன்பானவர்களே! அல்லாவைப் பயந்துகொள்ளுவொம். எடுப்பார் கைப்பிள்ளையாக நம் பேரவை செயல்பட்டு வருவதையும், நீதியின் குரல்கள் நசுக்கப்படுவதையும் எல்லோரும் எல்லா நேரத்திலும் பார்த்துக்கொண்டிருந்தாலும், பார்க்க வேண்டியவன், பார்க்க வேண்டிய நேரத்தில் பார்த்துக்கொள்வான்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
FaamsAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved